“தரமிகு கல்வி, தரமிகு போதனை முறைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, ஏழைகளும் தர மான கல்வியைப் பெற வாய்ப்பு களை ஏற் படுத்துவது, அதாவது இந்திய பெண் ணும், தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதி யினரும், ஆதிவாசியினரும், சிறுபான்மை யினரும் தேடுகல்வியைப் பெற சம வாய்ப் புகளை உருவாக்குவது,

சமச்சீர் கல்வி என்றால் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம். இது CBSE
மற்றும் இண்டெர்நேசனல் சிலபஸ் etc… இவைகளுக்கு இது பொருந்தாது.
சமச்சீர் கல்வி திட்டத்தின் நிறைகளும் குறைகளுமாக கருதப்படுவது:
இதில் உள்ள நன்மைகள் என்னவெல்லாம், என்று பார்த்தோமானால் சமச்சீர் என்ற வார்த்தையிலே இனிமை இருப்பதோடு மட்டுமல்லாமல் இதனால் மெட்ரிக்குலேசன் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் இஸ்டம் போல் புத்தகங்களுக்கு கட்டணம் வசூலிக்கமுடியாது. பாடத்திட்டத்தையும் ஒரே அடியாக குறை சொல்ல முடியாது என்பதும் உண்மை. கற்றலின் இனிமைஇதையே தாரக மந்திரமாகக் கொண்டு இப்பாடத்திட்டங்கள் பல்வேறு அறிஞர்கள் கருத்தரங்குகள் நடத்தியும், நேரடி ரிப்போர்ட்கள் செய்தும் தயாரிக்கப்பட்டதே… இதற்காகவும் அரசுப்பணம்(மக்கள் பணம்) செலவழிக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்க பின்னர் உதவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக