அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _



  



  மக்கள் அமைதி காக்க வேண்டும். வதந்திகளை நம்பாது, தமது அன்றாடக் கருமங்களை செய்யத் தொடங்க வேண்டுமென பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் வேண்டுகோள் விடுக்கின்றன.

மக்கள் ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்குவதால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மனதில் கொண்டு வரம்பு மீறி செயற்படக் கூடாது என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் சந்தேகத்தின் பேரில் நடமாடுபவர்களாக கருதப்படுபவர்களை பொலிஸாரிடம் கையளிக்குமாறும் அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிக்க வேண்டாமென்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுபற்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

கிறீஸ் மனிதர்கள் என்றோ மர்ம மனிதர்கள் என்றோ எவரும் இல்லை. முன்னர் காட்டுக்கு விறகு வெட்டப் போகிறவனை களவாக விறகு வெட்ட போகிறவன் என்று சொன்னார்கள். கோழி திருடியவனை கோழிக் கள்ளன் என்று சொன்னார்கள். பெண்கள் விடயத்தில் தவறாக நடந்து கொண்டவர்களைக் காமுகன் என்று சொன்னார்கள். இப்போது இவர்கள் எல்லோ ரையும் கிறீஸ் மனிதன் அல்லது மர்ம மனிதன் என்று சொல்கின்றார்கள் எனத் தெரிவித்தார். கிறீஸ் மனிதர்கள், மர்ம மனிதர்கள் குறித்து நாட்டில் பல பாகங்களிலும் இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இதன் உண்மைத்தன்மை பற்றி பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது வெறும் கட்டுக்கதை, வதந்தி பரப்புவோரின் செயற்பாடு உண்மைக்கு மாறானது என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால் இவற்றையும் மீறி காட்டுத் தீ போல நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பரவி மக்களை பயப் பீதியில் உறைய வைத்துக் கொண்டிருக்கின்றது.

மக்கள் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாதிருக்கையில் ஒரு சிலர் சட்டத்தையும் ஒழுங்கையும் தமது கையில் எடுத்துள்ளனர். இதனால் கொலைகளும் விழுந்துள்ளன.

இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மக்களின் பயப் பீதி அகற்றப்படாவிட்டால் மேலும் பாரிய விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பது மட்டும் உண்மையாகும். இந்த விவகாரத்தால் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் மக்கள் பொலிஸாருடன் மோதியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தரப்பில் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்குமப்பால் கிறீஸ் மனிதர்கள் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் நடமாடியவர்களை மக்கள் தாக்கியுள்ளனர். பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

பொதுமக்களின் கட்டு மீறிய நிலையில் கொலைகளும் இடம்பெற்றுள்ளன.

மலையகம், மட்டக்களப்பு, அம்பாறை என பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம மனித விவ காரம் கொழும்பையும் விட்டு வைக்கவில்லை. கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பஞ்சிகாவத்தை பகுதியில் மர்ம மனிதன் வந்திருப்பதாகக் கூறி திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பொலிஸார் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர். இறுதியில் மர்ம மனிதன் இல்லை என்பதை தேடுதலின் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தியதன் பின்னர் மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மட்டக்குளி பகுதியில் மர்ம மனிதன் ஒருவரால் பெண் ஒருவர் துரத்தப்பட்டதாகவும் அவரது மார்பில் கீறி காயங்களை உண்டு பண்ணியதாகவும் செய்திகள் பரவியதையடுத்து அப்பகுதி மக்களும் நித்திரையின்றி விடிய விடிய விழித்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செய்திகளையடுத்து பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வதந்திகளை நம்பாது அமைதி காத்து செயற்பட வேண்டுமென பொலிஸார் மாத்திரமல்ல சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுக்கின்றன.

அப்புத்தளைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் போன்று பாரதூரமான சம்பவங்களெதுவும் இடம்பெற மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக