10 அமெரிக்க போர் விமானங்கள் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் நுழைந்து பறந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை தனது கண்டனத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளது. என்று சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறியுள்ளது என்று விமான படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது . இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர். அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது . ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
from .lankamuslim.org


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக