கிறீஸ் மனிதர்களின் நடமாட்டமும் அடாவடித்தனங்களும் நாட்டில் பல பாகங்களிலும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் அதேவேளை, சில இடங்களில் உடல் எங்கும் கிறீஸ்ஸை பூசிக்கொண்டு மக்களை பீதியில் ஆழ்த்திய நபர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மாத்தறை, பதுளை, புசல்லாவை, பிபிலை, சியம்பலாண்டுவ, அலவது கொடை, பதுளை, ரம்பேவ, கிராந்துரு கோட்டை, மஹியங்கனை இறக்காமம் உள்ளிட்ட பிரதேசங்களில் இத்தகைய மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
மாத்தறை, பதுளை, புசல்லாவை, பிபிலை, சியம்பலாண்டுவ, அலவது கொடை, பதுளை, ரம்பேவ, கிராந்துரு கோட்டை, மஹியங்கனை இறக்காமம் உள்ளிட்ட பிரதேசங்களில் இத்தகைய மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
எனினும் கிறீஸ் மனிதர்கள் என்று கூறப்படுவதில் உண்மை எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர் நாட்டின் பல பிரதேசங்களில் கிறீஸ் மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் தகவல்களில் எந்தவித உண்மைகளும் கிடையாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கிறீஸ் மனிதனின் நடமாட்டம் உருவாக்கப்பட்ட கதை என்பது பொலிஸார் நடத்திய விசாரணைகளில் திட்டவட்டமாக தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
.
கிறீஸ் மனிதனின் நடமாட்டம் உருவாக்கப்பட்ட கதை என்பது பொலிஸார் நடத்திய விசாரணைகளில் திட்டவட்டமாக தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
.
இறக்காமம் வரிப்பத்தான் சேனைப் பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டமும் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இறக்காமம் அமீர் அலி புரத்திலுள்ள வீடொன்றின் பின்புறமாக கறுத்த உடையணிந்து சப்பாத்துடன் நடமாடியதைக் கண்ட குடியிருப்பாளர்கள் கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்த போது மர்ம மனிதர்கள் தப்பியோடியுள்ளனர். அங்கு ஒன்று கூடிய மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மர்ம மனிதர்க ளைத்தேடி வலைவிரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிறீஸ் மனிதனின் அச்சம் காரணமாக முஸ்லிம் பெண்கள் இரவுநேர தறாவித் தொழுகைக்காக வீடுகளிலிருந்து வெளிக்கிளம்ப அஞ்வுசதாகவும், இதனால் அவர்கள் வீடுகளிலேயே தறாவித் தொழுகையை நிறைவேற்றுவதாகவும் அறியவருகிறது.
இதேவேளை கிறீஸ் மனிதனின் அச்சம் காரணமாக முஸ்லிம் பெண்கள் இரவுநேர தறாவித் தொழுகைக்காக வீடுகளிலிருந்து வெளிக்கிளம்ப அஞ்வுசதாகவும், இதனால் அவர்கள் வீடுகளிலேயே தறாவித் தொழுகையை நிறைவேற்றுவதாகவும் அறியவருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக